மருமகளை உதைத்தல், விவாகரத்து செய்வதாக மிரட்டுதல் குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்

அதேபோல, மருமகளை மாமியார் அடிக்கடி வேலை வாங்குவது அல்லது தான் உடுத்திய உடைகளை மருமகளுக்கு கொடுத்தாலோ அதையும் குற்றச் செயலாக கருத முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இந்த பரபரப்பு உத்தரவை நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் பிறப்பித்த இந்த உத்தரவில், ஒரு வேளை மருமகள் திருமணத்தின்போது, தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த நகைககள், பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களை மாமியார் எடுத்துக் கொண்டால், அது ஐபிசி 406வது பிரிவின் கீழ் நம்பிக்கைத் துரோகச் செயலாகும் என்றும் கூறியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோனிகா. இவரது கணவர் விகாஸ் சர்மா. இவர் தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றி வருகிறார். விகாஸ் சர்மாவின் பெற்றோர் பாஸ்கர்லால் மற்றும் விமலா. மோனிகா, விகாஸின் 2வது மனைவி ஆவார்.
மோனிகாவுக்கும், விகாஸின் தாயார் விமலாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து தனது மாமியார் மற்றும் கணவர் தன்னை சித்திரவதைப்படுத்துவதாக கூறி பாட்டியாலா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் மோனிகா. அதை விசாரித்த கோர்ட், விகாஸ் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது விகாஸ் குடும்பம். அங்கு அந்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை விகாஸ் குடும்பம் அணுகியது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில், தன்னை தனது மாமியார் காலால் எட்டி உதைத்ததாகவும், தனது தாயாரை பொய் சொல்லி என்று கூறித் திட்டியதாகவும், உன்னை விவாகரத்து செய்து விடுவான் எனது மகன் என்று கூறியதாகவும் மனுதாரர் (மோனிகா) கூறியுள்ளார்.
இவை அனைத்தும் ஐபிசி 498-ஏ பிரிவின் கீழ் குற்றச் செயலாகாது, தண்டனைக்குரிய குற்றமும் ஆகாது.
அதேபோல தனது கணவரை தனக்கு எதிராக மாமியார் மாற்றி விட்டார், தனது பழைய உடைகளை அணியுமாறு கூறினார், தொடர்ந்து தன்னை வேண்டும் என்று வேலை வாங்கி வந்தார் என்று மனுதாரர் கூறுவதும் தண்டனைக்குரிய குற்றமல்ல. இவற்றை கொடுமைப்படுத்தும் செயல்களாக கருத முடியாது.
அதேபோல எனது மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான் என்று கூறி மாமியார் மிரட்டியதாக மனுதாரர் கூறுவதும் கூட தண்டனைக்குரிய குற்றச் செயலாக கருத முடியாது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications