மருமகளை உதைத்தல், விவாகரத்து செய்வதாக மிரட்டுதல் குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்

அதேபோல, மருமகளை மாமியார் அடிக்கடி வேலை வாங்குவது அல்லது தான் உடுத்திய உடைகளை மருமகளுக்கு கொடுத்தாலோ அதையும் குற்றச் செயலாக கருத முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இந்த பரபரப்பு உத்தரவை நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் பிறப்பித்த இந்த உத்தரவில், ஒரு வேளை மருமகள் திருமணத்தின்போது, தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த நகைககள், பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களை மாமியார் எடுத்துக் கொண்டால், அது ஐபிசி 406வது பிரிவின் கீழ் நம்பிக்கைத் துரோகச் செயலாகும் என்றும் கூறியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோனிகா. இவரது கணவர் விகாஸ் சர்மா. இவர் தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றி வருகிறார். விகாஸ் சர்மாவின் பெற்றோர் பாஸ்கர்லால் மற்றும் விமலா. மோனிகா, விகாஸின் 2வது மனைவி ஆவார்.
மோனிகாவுக்கும், விகாஸின் தாயார் விமலாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து தனது மாமியார் மற்றும் கணவர் தன்னை சித்திரவதைப்படுத்துவதாக கூறி பாட்டியாலா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் மோனிகா. அதை விசாரித்த கோர்ட், விகாஸ் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது விகாஸ் குடும்பம். அங்கு அந்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை விகாஸ் குடும்பம் அணுகியது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில், தன்னை தனது மாமியார் காலால் எட்டி உதைத்ததாகவும், தனது தாயாரை பொய் சொல்லி என்று கூறித் திட்டியதாகவும், உன்னை விவாகரத்து செய்து விடுவான் எனது மகன் என்று கூறியதாகவும் மனுதாரர் (மோனிகா) கூறியுள்ளார்.
இவை அனைத்தும் ஐபிசி 498-ஏ பிரிவின் கீழ் குற்றச் செயலாகாது, தண்டனைக்குரிய குற்றமும் ஆகாது.
அதேபோல தனது கணவரை தனக்கு எதிராக மாமியார் மாற்றி விட்டார், தனது பழைய உடைகளை அணியுமாறு கூறினார், தொடர்ந்து தன்னை வேண்டும் என்று வேலை வாங்கி வந்தார் என்று மனுதாரர் கூறுவதும் தண்டனைக்குரிய குற்றமல்ல. இவற்றை கொடுமைப்படுத்தும் செயல்களாக கருத முடியாது.
அதேபோல எனது மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான் என்று கூறி மாமியார் மிரட்டியதாக மனுதாரர் கூறுவதும் கூட தண்டனைக்குரிய குற்றச் செயலாக கருத முடியாது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications