For Daily Alerts
Just In
முருகப்பா குழுமத்துக்கு புதிய தலைவர்!
முருகப்பா குழுமத்தின் புதிய தலைவராக வி பாலசுப்பிரமணியன் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட, 100 ஆண்டு பாரம்பர்யம் மிக்க நிறுவனம் முருகப்பா குழுமம். 29 நிறுவனங்கள் இந்த குழுமத்தில் உள்ளன.
இதன் தலைவர் மா அழகப்பன், வரும் அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார். எனவே அவரது இடத்தில் புதிய தலைவரை நியமிக்கம் பணிகள் தீவிரமாகியுள்ளன.
முருகப்பா குழுமம் ஒரு குடும்பத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் என்பதால் வழக்கமாக அதன் தலைவர்கள் அந்த குடும் வாரிசுகளாகவே இருந்து வந்தனர். இப்போதும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த வி.பாலசுப்பிரணியன் தலைவராவார் எனத் தெரிகிறது.
இந்தத் தேர்வை முறைப்படி அறிவிக்க முருகப்பா நிறுவன இயக்குநர்களின் உயர்மட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் இந்த வாரம் நடக்கிறது. பின்னர் புதிய தலைவர் பெயர் முறைப்படி அறிவிக்கப்படும்.
Comments
Story first published: Friday, August 7, 2009, 15:32 [IST]