டாக்டர்கள் கூறியபடி டாமிப்ளூ சாப்பிட்ட இந்தியப் பெண் பலி!
லண்டன்: இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொலைபேசியில் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறியபடி டாமிப்ளூ மாத்திரையை சாப்பிட்டார். ஆனால் 12 மணி நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை, மாறாக 'மெனி்ஞ்சிடிஸ்' காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்று தவறாக கருதி டாக்டர்கள் டாமிப்ளூவை சாப்பிடச் சொன்னதால் ஏற்பட்ட விளைவு இது.
லீசஸ்டர் நகரில் உள்ள கிழக்கு மிட்லான்ட்ஸ் பகுதியில் வசித்து வந்தார் ஜஸ்வீர் கெளர். 48 வயதான இவருக்கு தொண்டை வலியும், வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து போன் மூலம் டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அவர்களோ, கெளருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி, டாமிப்ளூ மாத்திரயை சாப்பிடுமாறு பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து அவர் டாமிப்ளூ மாத்திரை சாப்பிட்டுள்ளார்.
ஆனால் அடுத்த 12 மணி நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நான்கு நாள் கழித்து அவர் உயிரிழந்தார்.
மெனிஞ்சிடிஸை ஏற்படுத்தும் பாக்டீரியாவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்தது. தவறான மருந்தாக டாமிப்ளூவை சாப்பிட்டதால் கெளர் உயிரிழக்க நேரிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கெளரின் மகன் சுக்வீந்தர் கில் கூறுகையில், இப்போது எதை எடுத்தாலும் பன்றிக் காய்ச்சல் என்றுதான் டாக்டர்களுக்குத் தோன்றுகிறது. தலைவலி வந்தால், காய்ச்சால் வந்தால், தொண்டை வலித்தால் உடனே டாமிப்ளூவை சாப்பிடச் சொல்கிறார்கள்.
ஆனால் எனது தாயாருக்கு வந்தது மெனிஞ்சிடிஸ். அதுகுறித்து டாக்டர்களுக்கு யோசனையே வராதது அதிர்ச்சி அளிக்கிறது என்றார் சோகத்துடன்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications