டாக்டர்கள் கூறியபடி டாமிப்ளூ சாப்பிட்ட இந்தியப் பெண் பலி!
லண்டன்: இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொலைபேசியில் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறியபடி டாமிப்ளூ மாத்திரையை சாப்பிட்டார். ஆனால் 12 மணி நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை, மாறாக 'மெனி்ஞ்சிடிஸ்' காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்று தவறாக கருதி டாக்டர்கள் டாமிப்ளூவை சாப்பிடச் சொன்னதால் ஏற்பட்ட விளைவு இது.
லீசஸ்டர் நகரில் உள்ள கிழக்கு மிட்லான்ட்ஸ் பகுதியில் வசித்து வந்தார் ஜஸ்வீர் கெளர். 48 வயதான இவருக்கு தொண்டை வலியும், வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து போன் மூலம் டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அவர்களோ, கெளருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி, டாமிப்ளூ மாத்திரயை சாப்பிடுமாறு பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து அவர் டாமிப்ளூ மாத்திரை சாப்பிட்டுள்ளார்.
ஆனால் அடுத்த 12 மணி நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நான்கு நாள் கழித்து அவர் உயிரிழந்தார்.
மெனிஞ்சிடிஸை ஏற்படுத்தும் பாக்டீரியாவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்தது. தவறான மருந்தாக டாமிப்ளூவை சாப்பிட்டதால் கெளர் உயிரிழக்க நேரிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கெளரின் மகன் சுக்வீந்தர் கில் கூறுகையில், இப்போது எதை எடுத்தாலும் பன்றிக் காய்ச்சல் என்றுதான் டாக்டர்களுக்குத் தோன்றுகிறது. தலைவலி வந்தால், காய்ச்சால் வந்தால், தொண்டை வலித்தால் உடனே டாமிப்ளூவை சாப்பிடச் சொல்கிறார்கள்.
ஆனால் எனது தாயாருக்கு வந்தது மெனிஞ்சிடிஸ். அதுகுறித்து டாக்டர்களுக்கு யோசனையே வராதது அதிர்ச்சி அளிக்கிறது என்றார் சோகத்துடன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications