வீழ்ச்சியிலிருந்து மீட்சிக்குத் திரும்பும் ஆறு முக்கிய நாடுகள்!
உலகின் ஆறு முக்கிய நாடுகள் பெருமந்தம் எனப்படும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் நாடு தனது பொருளாதாரம் எதிர்பாராத விதமாக நல்ல பாதைக்குத் திரும்பிவிட்டதாகவும், தொழில்துறை மற்றும் பணிகள் துறையில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனை ஐஎம்எப் உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளுக்கும் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியும் தங்கள் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டதாகக் கூறியுள்ளது. உண்மையில் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தங்கள் மொத்த உற்பத்தி 0.3 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியடையும் என எதிர்ப்பார்த்ததாகவும், ஆனால் அந்த அளவை விட அதிக வளர்ச்சியை இப்போது பெற்றுள்ளதாகவும் இருநாடுகளும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளன.
மற்ற 3 நாடுகளில் இந்தியாவும் சீனாவும் ஏற்கெனவே வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி இரு நாடுகளிலுமே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
வீழ்ச்சியிலிருந்து எழுந்து வந்துள்ள அடுத்த பெரிய நாடு பிரேசில். ஜப்பானும் தங்கள் பொருளாதார நெருக்கடிகள் தீரத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால் அதேநேரம், உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் அளவு பெரிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்றவை இன்னும் மந்த நிலையிலிருந்து மீட்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் அல்லது அக்டோபருக்குப் பிறகுதான் தங்கள் நாட்டின் பொருளாதார மீட்சி குறித்த சரியான விவரங்கள் தெரியும் என்கிறது அமெரிக்கா. இப்போதைக்கு நிதித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறைய ஆரம்பித்துள்ளதை ஒரு நல்ல அறிகுறியாகக் கருதுகிறது அமெரிக்கா.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications