ஸ்வைன்: பலி 24 ஆனது - புனேவில் மட்டும் 15 பேர் மரணம்
Subscribe to Oneindia Tamil

பன்றிக் காய்ச்சலால் மகாராஷ்டிர மாநிலம் புனேதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குதான் அடுத்தடுத்து உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் அங்கு ஐந்து பேர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு 70 வயது பருபாய் ஷிண்டே என்ற பெண் உயிரிழந்தார். நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் இறந்தார்.
அதேபோல 40 வயதாகும் பிரபாகர் வாரிகர் என்பவரும் சசூன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார்.
இந் நிலையில் ராய்ப்பூரில் 18 வயது வாலிபர் ஒருவரும் பலியானார். இதன் மூலம் நாடு முழுவதும் 24 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications