சென்னையில் 3 கிலோ தங்கம் கொள்ளை-ஒருவர் கைது, 7 பேருக்கு வலைவீச்சு
சென்னை: சென்னையில் கேரள நகைக்கடை ஊழியரை கட்டிப்போட்டி 3 கிலோ தங்கக் கட்டிகளை கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி பிடிபட்டுள்ளார். இதில் தொடர்புடைய மேலும் 7 பேரைப் பிடிக்க தனிப் படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
கேரளாவில் உள்ள திருச்சூர் நகைக்கடை ஒன்றிலிருந்து சென்னையில் உள்ள சில நகைகடைகளுக்கு தங்க கட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக திருச்சூர் கடையை சேர்ந்த வினீத், சிண்டோ ஆகியோர் அடிக்கடி சென்னை வந்து செல்வது வழக்கம்.
சென்னையில் அவர்கள் வேப்பேரியில் இருக்கும் பிஷப் லேன் என்று அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் 3 கிலோ தங்க கட்டிகளுடன் அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் வழக்கம்போல் தங்கினர். சிண்டோ வெளியில் சென்றிருந்த நிலையில் அங்கு வந்த மர்மக் கும்பல் வினீதை தாக்கி, கட்டிப் போட்டுவிட்டு தங்க கட்டிகளை கொள்ளையடித்து கொண்டு தப்பியது.
இது குறித்து விசாரணை நடத்திய வேப்பேரி போலீசார், திருச்சூர் நகைக்கடையின் ஊழியர்கள் குறித்த விவரங்களை சேகரித்தபோது அதில், கேரள மாநிலம் சோட்டான்சேரி என்ற கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (34) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நகைகடையில் வேலைக்கு சேர்க்கப்பட்டு மோசமான நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்டவர்.
விசாரணையில் ராதாகிருஷ்ணன், சமீபத்தில் சென்னை வந்து அரும்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தமிழக போலீசார் கேரளா சென்று ராதாகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகைகளைக் கொள்ளையடித்ததை அவர் ஒப்புகொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இத் திட்டத்தில் ராமகிருஷ்ணுக்கு உதவிய வினோத், அஜீத், விஜயன், முஜீப், அஜய் உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய தனிப்படை கேரளா விரைந்துள்ளது.
தங்கக் கட்டிகள் இந்தக் கும்பல் வசம் இருப்பதாக ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications