சவுதியில் பன்றி காய்ச்சலுக்கு இந்தியர் பலி
ரியாத்: பன்றி காய்ச்சல் நோய்க்கு சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக மிரட்டி வந்த பன்றி காய்ச்சல் தற்போது சவுதி அரேபியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு சுமார் 700 பேர் வரைக்கும் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இங்கு பன்றி காய்ச்சலுக்கு மூன்று பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், ஊர், பெயர் உள்ளிட்டவை தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து சவுதி சுகாதார துறை அமைச்சர் கூறுகையில்,
கடந்த 14ம் தேதி ஒரு 28 வயது பெண்ணும், 11 வயது சிறுமியும் பலியானார்கள். அதற்கு முந்தைய நாள் ஒரு இந்தியர் மரணமடைந்துள்ளார். இதையடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. என்றாலும் சவுதியில் பன்றி காய்ச்சல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications