சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 2வது பலி
சென்னை: பன்றிக் காய்ச்சலுக்கு சென்னையில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 2 பேர் இறந்துள்ளனர்.
சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (47). மீனவரான இவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.
தப்பி ஓடியவர்..
பிரான்சிஸ் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இடையில் திடீரென அவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரைத் தேடிப் பிடித்து மீண்டும் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இடையில் அவர் சிகிச்சையிலிருந்து விடுபட்டு ஓடியதால் அவருக்கு வைரஸ் பாதிப்பு அதிகமாகி விட்டது. இதுவே அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனளிக்காமல் போனதற்குக் காரணம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சஞ்சய் என்ற 4 வயது சிறுவன் ஏற்கனவே பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தான். இந்த நிலையில் தற்போது 2வது பலி ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில் இறந்தோரின் எண்ணிக்கை இதன் மூலம் 45 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 3 பேருக்கு அறிகுறி..
இந் நிலையில் சிங்கப்பூர், கொழும்பு, துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய 3 பேருக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறி காணப்பட்டதால் அவர்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குமரி- 3 பேருக்கு ஸ்வைன் இல்லை..
இந் நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும் அந்த நோய் இல்லை என தெரிய வந்துள்ளது.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications