என் கட்சியை அழிக்க நாயுடு முயற்சி-சிரஞ்சீவி
ஹைதராபாத்: நாங்கள் இருந்தால் தான் ஆட்சிக்கு வருவதற்கு பெரும் இடையூறாக இருக்கிறது என்பதால், எங்களது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை அழிக்கப் பார்க்கிறார் சந்திரபாபு நாயுடு என்று கூறியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
இதுகுறித்து சிரஞ்சீவி கூறுகையில், இரு தெலுங்கு நாளிதழ்களின் துணையுடன் எனது கட்சியை அழிக்க சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் சந்திரபாபு நாயுடு. அந்த இரு நாளிதழ்களும் நாயுடுவுக்கு நெருக்கமானவை என்பது ஊரறிந்த ரகசியம். அவர்கள் தெலுங்கு தேசத்தின் ஆதராளர்கள். பிரஜா ராஜ்ஜியம் இருப்பதால் தெலுங்குதேசம் ஆட்சிக்கு வர முடியாத நிலை இருப்பதால் எங்களை அரசியல் ரீதியாக அழிக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவின் இந்தப் புகாருக்கு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார் நாயுடு.
சிரஞ்சீவி கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுடன் கட்சியை இணைக்க வேண்டும் என அவரை நெருக்கி வருகின்றனர். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மீது பாய்ந்துள்ளார் சிரஞ்சீவி.












Click it and Unblock the Notifications