world, afghanistan, election, president, karzai, obama, உலகம், ஆப்கானிஸ்தான், தேர்தல், அதிபர், கர்ஸா
காபூல்: அதிபர் தேர்தலில் எங்களுக்கே வெற்றி என்று ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயின் தேர்தல் மேலாளர் அறிவித்துள்ளார். ஆனால் இதை எதிர்க் கட்சியினர் நிராகரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. தலிபான் தீவிரவாதிகளின் மிரட்டல் மற்றும் தாக்குதல்களையும் மீறி 70 சதவீத வாக்குப் பதிவு நடந்தது.
தேர்தல் முடிந்தததும் வாக்குகள் எண்ணப்பட்டன. இருப்பினும் இதுவரை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தங்களது அணியே வெற்றி பெற்றுள்ளதாக கர்ஸாய் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்ஸாயின் தேர்தல் மேலாளர் டீன் முகம்மது கூறுகையில், ஆரம்ப கட்ட முடிவுகளைப் பார்க்கும்போது அதிபர் கர்ஸாய் மெஜாரிட்டி பெற்று விட்டதாகவே தெரிகிறது. இருப்பினும் முடிவை தேர்தல் ஆணையம்தான் முறைப்படி அறிவிக்க வேண்டும்.
இரண்டாவது கட்ட வாக்கு எண்ணிக்கை தேவைப்படாது என்றே கருதுகிறோம். எங்களுக்கே மெஜாரிட்டி கிடைத்துள்ளது என்றார்.
ஆனால் கர்ஸாயை எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லாவின் செய்தித் தொடர்பாளர் இதை நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் பாஸல் சங்கசரகாய் கூறுகையில், இது உண்மையல்ல. நாங்களும் கூட 2வது சுற்று எண்ணிக்கை தேவையில்லை, அப்துல்லாதான் வென்று்ளார் என்று கூற முடியும். கர்ஸாய் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் யாரும் வெற்றி பெற்றதாக கூறிக் கொள்ள முடியாது என்றார்.
வாக்குகள் கிட்டத்தட்ட எண்ணி முடிக்கப்பட்டு விட்டாலும் கூட தேர்தல் முடிவுகள் தெரிய 2 வாரமாகும் எனத் தெரிகிறது.
தேர்தலுக்கு ஒபாமா பாராட்டு
இதற்கிடையே, தீவரவாதிகளின் அச்சுறுத்தலையும் தாண்டி தேர்தல் நடந்து முடிந்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
தலிபான் தீவிரவாதிகள் தேர்தலை சீர்குலைக்க கடுமையாக முயன்றனர். அதையும் தாண்டி தேர்தல் நடந்து முடிந்திருப்பது வெற்றிகரமான ஒன்று.
ஆப்கானிஸ்தானில் அடுத்து செய்ய வேண்டியது குறித்து அரசும், புதிய அதிபரும் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் அங்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் பணிகள் (தீவிரவாத ஒழிப்பு) முடிய சில காலம் பிடிக்கும் என்றே கருதுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications