எம்பிபிஎஸ்-இன்று 2வது கட்ட கவுன்சிலிங்
சென்னை: தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் காலியாக இருக்கும் 16 சீட்கள் நிரப்பும் வகையில் இன்று இரண்டாவது கட்ட கவுன்சிலி்ங் நடக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 14 அரசு மற்றும் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கடந்த மாதம் முதலாம் கட்ட கவுன்சிலிங் நடந்தது. இதில் அனைத்து கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பின.
இந்நிலையில் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த சுமார் 16 மாணவர்கள் கல்லூரியில் சேரவில்லை. இதையடுத்து அந்த 16 இடங்களும் காலியாக இருந்தன. இந்த இடங்களுக்கு இன்று இரண்டாவது கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
இரண்டாவது கட்ட கவுன்சிலிங், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபற்றது. அக்கல்லூரியின் மருத்துவ தேர்வு செயலாளர் டாக்டர் கிரேஸ் ஜீவமணி இதை நடத்துகிறார். ஏற்கனவே கொடுக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இது நடைபெறுகிறது.
இந்த இரண்டாவது கட்ட கவுன்சிலிங்கில் தர்மபுரி மருத்துவ கல்லூரிக்கான இடங்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கான கவுனிசிலங்கில் மூன்றாவது கட்ட கலந்தாய்வில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாவது கட்ட கவுன்சிலிங்கில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள கற்பக விநாயாகர் கல்லூரி உட்பட மேலும் சில கல்லூரிகள் இடம் பெறும் என தெரிகிறது.
பல் மருத்துவ கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கான் கவுன்சிலிங் நாளை 26ம் தேதி நடக்கிறது.












Click it and Unblock the Notifications