பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 83 ஆனது
டெல்லி: இந்தியாவின் பன்றிக் காய்ச்சல் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை மராட்டிய மாநிலம் புனே நகரில், பன்றி காய்ச்சலால் 43 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை அருகே எல்.கே.ஹிராநந்தானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தீப் கெய்க்வாட் (28) என்பவர் நேற்று உயிரிழந்தார். இவரை சேர்த்து மகாராஷ்டிராவில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் (38), வெங்கடேஷ் (45), பி.முனிரத்தினம் (48), புஷ்பலதா பக்தீஷ் (35) ஆகியோர் உயிர் இழந்தனர்.
கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 19 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
3273 பேர் பாதிப்பு:
இதற்கிடையே நாடு முழுவதும் 3273 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 177 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் 52 பேர், மகாராஷ்டிராவில் 31, டெல்லியில் 30, கர்நாடகம் 22, கேரளா 15, உ.பி. மற்றும் ஆந்திராவில் தலா 7 பேருக்கு நேற்று ஸ்வைன் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நேற்று உறுதி செய்யப்பட்ட 177 பேரில் ஒருவர் மட்டும் வெளிநாட்டிலிருந்து நோய் பாதிப்புக்கு ஆளாகி வந்தவர். மற்ற அனைவரும் உள்ளுக்குள்ளேயே பரவிய வைரஸ் பாதிப்பால் தாக்கப்பட்டவர்கள்.
இதுவரை இந்தியாவில் 17,777 பேரின் மாதிரிகள் பன்றிக் காய்ச்சல் சந்தேகம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. அதில் 3273 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில்தான் அதிக அளவிலான பாதிப்பு உள்ளது. அங்கு 1575 பேருக்கு பன்றிக் காய்சச்ல் பாதிப்பு உள்ளது. டெல்லியில், 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications