புனேவில் சிறுமி பலி - பன்றிக் காய்ச்சல் பலி 103 ஆனது

Subscribe to Oneindia Tamil

Sasson Hospital
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்கு புனேவில் இன்று 7 வயது சிறுமி பலியானாள். இதையும் சேர்த்து நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 103 ஆகவும், புனேவில் 32 ஆகவும் உயர்ந்துள்ளது.

பிரியங்கா ஷிமில்கர் என்ற அந்த சிறுமி ஆகஸ்ட் 29ம் தேதி சசூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த சிறுமியையும் சேர்த்து புனேவில் 32 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் 103 ஆக பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குங்குமத்திற்குத் தடை...

இதற்கிடையே மும்பையில் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வழியெங்கும் குங்குமத்தைத் தூவவும், அதைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கணேஷ் பூஜா மண்டல்கள் கூட்டத்தி்ல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குங்குமம் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள் என்பதால் அதைப் பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+