For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎம்எப்-பில் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் இந்தியா!

By Staff
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
லண்டன்: சர்வதேச நிதி நிறுவனமான ஐஎம்எப்பில் 10 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளது இந்தியா. இத்தகவலை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

லண்டனில் நடந்த பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா (BRIC) நிதியமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி கூறுகையில், மொத்தம் 80 பில்லியன் டாலர்களை இந்த நான்கு நாடுகள் கூட்டாக ஐஎம்எப்பில் முதலீடு செய்ய உள்ளதாகவும்.

இதில் இந்திய பங்களிப்பு மட்டும் 10 பில்லியன் டாலர்கள் என்றும் அவர் தெரிவித்தார். நடப்பு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளை மீட்க இந்தத் தொகை உதவும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் தொகையில் சீனாவின் பங்கு மட்டும் 50 பில்லியன் டாலர்கள். ரஷ்யா மற்றும் பிரேசில் தலா 10 பில்லியன் டாலர்கள்.

உலக வங்கியிலும் இதே போல முதலீடு செய்ய BRIC அமைப்பு விரும்புவதாகவும் முகர்ஜி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X