For Daily Alerts
Just In
அமைச்சர் வயலார் ரவியின் மனைவி மரணம்
சென்னை: மத்திய என்.ஆர்.ஐ. துறை அமைச்சர் வயலார் ரவியின் மனைவி மெர்சி சென்னையில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.
வயலார் ரவியின் மனைவி மெர்சி. 63 வயதான இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி இன்று காலை மெர்சி மரணமடைந்தார். மெர்சியின் மரணச் செய்தி அறிந்ததும் முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார்.
மெர்சியும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டவர். மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார்.
Comments
karunanidhi தமிழ்நாடு கருணாநிதி chennai சென்னை dies vayalar ravi வயலார் ரவி மரணம் wife மனைவி tamilnadu
Story first published: Saturday, September 5, 2009, 11:39 [IST]