சென்செக்ஸ்... நல்ல துவக்கம்!
மும்பை: கடந்த வாரம் முழுவதும் இறங்குமுகம் காட்டிய இந்திய பங்குச் சந்தை இந்த வாரத்தின் துவக்க நாளி ஏறுமுகம் காட்டி முதலீட்டாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.
பிற்பகலுக்குப் பின் 218 புள்ளிகள் உயர்வு பெற்ற சென்செக்ஸ் குறியீட்டு எண் 15907-ல் நின்றது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 70 புள்ளிகள் உயர்ந்தது.
இன்றைய நாளின் வர்த்தகத்தில் நல்ல உயர்வைச் சந்தித்தது டாடா மோட்டார்ஸ் பங்குகள்தான். 6.5 சதவிகிதம் வரை அப்பங்குகள் உயர்வு கண்டன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் பங்குகள் 5 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்தன. பார்தி ஏர்டெல், டிஎல்எப், ஐசிஐசிஐ, ஸ்டெர்லைட், டிசிஎஸ், டாடா ஸ்டீல் விப்ரா, ரிலையன்ஸ் இன்ப்ரா, ஹிண்டால்கோ போன்ற பங்குகளும் லாபத்தில் கைமாறின.
இன்றைய வர்த்தகத்தில் ஈடுபட்ட 2766 நிறுவனப் பங்குகளில் 2168 நிறுவனப் பங்குகள் லாபத்தில் கைமாறின.