சென்செக்ஸ்... நல்ல துவக்கம்!
மும்பை: கடந்த வாரம் முழுவதும் இறங்குமுகம் காட்டிய இந்திய பங்குச் சந்தை இந்த வாரத்தின் துவக்க நாளி ஏறுமுகம் காட்டி முதலீட்டாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.
பிற்பகலுக்குப் பின் 218 புள்ளிகள் உயர்வு பெற்ற சென்செக்ஸ் குறியீட்டு எண் 15907-ல் நின்றது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 70 புள்ளிகள் உயர்ந்தது.
இன்றைய நாளின் வர்த்தகத்தில் நல்ல உயர்வைச் சந்தித்தது டாடா மோட்டார்ஸ் பங்குகள்தான். 6.5 சதவிகிதம் வரை அப்பங்குகள் உயர்வு கண்டன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் பங்குகள் 5 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்தன. பார்தி ஏர்டெல், டிஎல்எப், ஐசிஐசிஐ, ஸ்டெர்லைட், டிசிஎஸ், டாடா ஸ்டீல் விப்ரா, ரிலையன்ஸ் இன்ப்ரா, ஹிண்டால்கோ போன்ற பங்குகளும் லாபத்தில் கைமாறின.
இன்றைய வர்த்தகத்தில் ஈடுபட்ட 2766 நிறுவனப் பங்குகளில் 2168 நிறுவனப் பங்குகள் லாபத்தில் கைமாறின.












Click it and Unblock the Notifications