ஸ்வைன்:பெங்களூரில் 2 பேர் பலி-இந்தியாவில் 131 ஆக உயர்வு
பெங்களூர்: பன்றி காய்ச்சலுக்கு பெங்களூரை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட இந்தியா முழுவதும் 6 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
பன்றி காய்ச்சல் நோய் இந்தியாவில் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக இருந்தது.
இந்நிலையில் நேற்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருவர் இறந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 5 மாத கர்ப்பிணி ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளார். அவருக்கு வயது 29 என தெரிகிறது.
மேலும், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு, கடந்த 4ம் தேதி இரவு தனியார் மருத்துவமனையில் பலியான 24 வயது பெங்களூர் பெண்ணும் பன்றி காய்ச்சலால் இறந்ததாக கர்நாடக சுகாதார துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது கர்நாடகாவில் இந்த நோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மூன்று பேர் இந்த காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் பெயர், ஊர் போன்றவை வெளியிடப்படவில்லை. இதையடுத்து மகாராஷ்டிராவில் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
இந்த இரு மாநிலங்களை தவிர்த்து குஜராத்திலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தியாவுக்கு 6வது இடம்...
இந்நிலையில் பன்றி காய்ச்சல் நோய் காரணமாக அதிக மக்களை இழந்த நாடுகள் வரிசையில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. நேற்று இந்தியா 8வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் மூன்று இடங்களில் பிரேசில்(657), அமெரிக்கா (593), அர்ஜென்டினா(465) உள்ளன.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications