மதுரை: போலீஸ்காரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து பெண் பலி
மதுரை: மதுரை மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் பெண் பலியானார்.
மதுரை மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் சதீஷ் குமார் என்ற போலீஸ்காரர் ஈடுபட்டிருந்தார். இன்று காலை அவர் பணியில் இருந்தபோது துப்பாக்கியை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அது எதிர்பாராத விதமாக சுட்டு விட்டது.
இதில் அந்தப் பக்கமாக போன சுந்தரவள்ளி என்ற பெண் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
திடீரென துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டு மக்கள் கூடி விட்டனர்.
இன்று மதுரை வருகிறார் ராகுல் காந்தி. மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். காந்தி மியூசியம், மாநகராட்சி வளாகத்திற்கு சற்று தொலைவில்தான் உள்ளது.
இந்த நிலையில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது. குண்டு வெடித்துவிட்டதாக புரளி கிளம்பியது. ஆனால் பின்னர்தான் தவறுதலாக துப்பாக்கி சுட்ட விவரம் தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் நந்தபாலன் கூறுகையில், இது தவறுதலாக துப்பாக்கி சுட்டதால் ஏற்பட்ட சம்பவம்தான். இதில் ஒரு பெண் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
சட்ட மாணவர்கள் மறியல்...
இதற்கிடையே ராகுல் காந்தியின் மதுரை வருகையைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் மதுரையில் கல்லூரிக்கு முன்பு வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கைத் தமிழர் இன அழிப்பைத் தடுக்கத் தவறியதற்காக காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால் போலீஸார் அவர்களை கலைந்து போகுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சட்டக் கல்லூரி வளாகம், காந்தி மியூசியத்திற்கு அருகில்தான் உள்ளது என்பதால் அங்கு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications