தூத்துக்குடி-கைதான 12 இலங்கை மீனவர் விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: இந்திய கடலோர படையினரால் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை மீனவர்கள் 12 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுவைந்து மீன் பிடித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்து மூன்று படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்தது. அவர்களை சொந்த ஊருக்கு திருப்பியனுப்ப உத்தரவிட்டது.

இதையடுத்து அவர்கள் 12 பேரும் தங்களது மூன்று படகுகளில் நேற்று தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மாலை சுமார் 4 மணிக்கு பழைய துறைமுகத்தில் இருந்து புறப்பட்டனர்.

இன்று அவர்கள் இலங்கை கடற்படையிடம் ஓப்படைக்கப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+