டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்-கோர்ட் உத்தரவு
கரூர்: நீதிமன்ற விசாரணையின் போது ஆஜராகாத குளித்தலை டிஎஸ்பி உள்ளிட்ட மூன்று பேருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டம் வீரராக்கியம் அருகே ஆண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(47).
இவருக்கும் மாயனூர் கட்டளை பகுதியைச் சேர்ந்த சிலம்பன் மகன் பிர்லா என்பவருக்கு கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து மாயனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், இது தொடர்பாக குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2ல் நீதிபதி ஆனந்தன் முன்னிலையில் வழக்குநடக்கிறது.
இந்த வழக்கில் ஆஜராக அப்போதைய குளித்தலை டிஎஸ்பி வெங்கடாஜலபதி, எஸ்ஐ நடராஜன், அரசு மருத்துவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் நீதிபதி பிடிவாரண்ட் பிறத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications