அதிமுக-புதுக்கோட்டை மாவட்ட செயலாளருக்கு கல்தா
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் வைரமுத்து உட்பட மூன்று பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மற்ற இருவர் புதுக்கோட்டை மாவட்ட ஜெ பேரவைச் செயலாளர் விஜய பாஸ்கர், ஒன்றிய செயலாளர் முத்து.
பதவி பறிக்கப்பட்ட இந்த மூன்று பேரும் நாடாளுமன்ற தேர்தலின் போது சிவகங்கை தொகுதி பொறுப்பாளர்களாக செயல்பட்டனர்.
அப்போது அதிமுக சார்பில் வழங்கப்பட்ட நிதியை இவர்கள் முறையாக செலவிடவில்லை எனவும், திமுகவினருடன் மறைமுகமாக தொடர்பு வைத்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் பலர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்டச் செயலாளர் பதவி புதுக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கருப்பையாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜெ. பேரவை செயலராக நெடுஞ்செழியன் எம்எல்ஏவும், புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளராக சுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications