அன்பழகனின் இந்து விரோத பேச்சு-பாஜக தாக்கு
அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் இந்து மதத்தை விமர்சனம் செய்கின்றனர். இது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
இஸ்லாமிய சமூகத்தினரின் புனித நாட்களான ரம்ஜான் நோன்பு தற்போது கடைபிடிக்கப்படுகிறது.
நேற்று சென்னையில் நடந்து ஈமான் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடந்த இப்தார் விருந்தில் கலந்து கொண்ட திமுக பொதுச் செயலாளரும், நிதியமைச்சருமான அன்பழகன் இந்துகளுக்கு விரோதமாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
திமுக தலைவர்கள் தங்களது இந்த போக்கை மாற்றி கொள்ள வேண்டும். இவர்கள் தங்களது இந்து எதிர்ப்பு கொள்கையை, இஸ்லாமியர்கள் மத்தியில் பேசுவது என்பது பொறுப்பற்றத்தனம்.
இஸ்லாமியர்கள் கூட்டத்தில் அவர் அவர்களை பாராட்டி பேசட்டும். அதில் தவறில்லை. ஆனால் அங்கு இந்து மதத்தை விமர்சிக்க கூடாது.
இது போன்ற பேச்சுக்களால் அவர் இஸ்லாமிய சமுதாயத்தை பற்றிய ஒரு கசப்பு உணர்வை இந்துக்கள் மத்தியிலும், இந்துக்கள் மீது ஒரு வெறுப்பு உணர்வை இஸ்லாமியர்கள் மத்தியிலும் உருவாக்க நினைக்கிறார் அன்பகழகன். இரு மத பேதத்தில் குளிர்காய பார்க்கிறார்.
இந்த மண்ணின் கலாச்சாரத்தை எந்த மதம் பேணிக்காத்தது என்கிற பொது தலைப்பில் விவாதம் நடத்தத் தாயாரானால் இந்து மதத்தின் பங்களிப்பு குறித்துப் பேச பல அறிஞர்கள் தயார் என்று கூறியுள்ளார் இல.கணேசன்.