வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கு இந்தியாவில் தேர்வு
டெல்லி: வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் டாக்டராக பணிபுரிய விரும்புபவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து ஹார்வேர்டு, ஜான் ஹாப்கின்ஸ் என உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் என எங்கு படித்திருந்தாலும் இந்த தேர்வை எழுதினால் மட்டுமே இநதியாவில் டாக்டராக பயிற்சி செய்ய முடியும்.
நேபாளம் மற்றும் ரஷ்யாவில் மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்களின் தரத்தில் குறைபாடு இருப்பதாக கூறி இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2002 மார்ச் 15ம் தேதி தேர்வு ஒன்றை நடத்த திட்டமிட்டது.
இதை எதிர்த்து நேபாள மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பஞ்சல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் அந்த மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில்,
இந்திய குடிமகனாக இருப்பவர்கள் வேறு நாடுகளில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, இந்தியாவில் டாக்டராக பணியாற்ற நினைத்தால், இந்திய மருத்துவ கவுன்சிலின் தேர்வு முறைகளை பின்பற்ற வேண்டும்.
அதில் தேர்வு பெற்றால் மட்டுமே அவர்களுக்கு மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற அனுமதியளிக்கப்படும். இது 2002 மாரச் 15ம் தேதிக்கு பின்னர் வெளிநாட்டில் படிப்பு முடித்தவர்களுக்கு பொருந்தும். அவர்கள் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்.
பல நாடுகளில் அளிக்கப்படும் மருத்துவ கல்லூரிகளின் இந்தியாவின் தரத்துக்கு இல்லை. இதனால் இந்த தேர்வுகள் அவசியம் என்றனர்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications