ஜி-20 மாநாடு - இன்று மன்மோகன் சிங் அமெரிக்கா பயணம்
டெல்லி: ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நான்கு நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
பிரதமருடன் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரும் செல்கின்றனர்.
செப்டம்பர் 24 முதல் 25 வரை பிட்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவையும் மன்மோகன் சிங் சந்திப்பார்.
நிதிச் சந்தைகளை வலுப்படுத்துவது, உலகப் பொருளாதார மீட்சி உள்ளிட்ட முக்கிய உலகப் பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
சிக்கணம் - ஆள் குறைப்பு...
இந்த நிலையில், மத்திய அரசின் சிக்கண நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமருடன் அமெரிக்கா செல்லும் குழுவிலிருந்து சிலர் நீக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு தற்போது சிக்கண நடவடிக்கையை கையாண்டு வருகிறது. மத்திய அமைச்சர்கள் விமான பயணம் மேற்கொள்ளும்போது எகானமி வகுப்பில்தான் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜி 20 மாநாட்டுக்காக இன்று நான்கு நாள் அமெரிக்க பயணம் கிளம்புகிறார் பிரதமர். அவரது குழுவில் பத்திரிக்கை செய்தி அமைப்பு (பிஐபி), தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ, பிலிம்ஸ் டிவிஷன் ஆகியவற்றைச் சேர்ந்த செய்தியாளர்கள் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் தற்போது பிஐபி, வெளியுறவுத்துறையைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி, தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவைச் சேர்ந்த தலா ஒரு நிருபர், பிலிம் டிவிஷனைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications