For Quick Alerts
For Daily Alerts
Just In
பன்றிக் காய்ச்சலுக்கு கன்னியாகுமரி பெண் பலி - தமிழக சாவு 4 ஆனது
நாகர்கோவில்: பன்றிக் காய்ச்சலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பலியானார். இவர்தான் குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் பலி ஆவார். இவரையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள இடைக்கோடு பகுதியச் சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி வல்சலா குமாரி (40). கடந்த 2 வாரங்களாக காய்ச்சல் அடித்து வந்தது. இதையடுத்து பார்வதிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு நேற்று இரவு வல்சலா குமாரி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவரையும் சேர்த்து தற்போது தமிழகத்தில் 4 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, September 23, 2009, 9:19 [IST]