Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

995 ஏக்கர் நில மோசடி-சார் பதிவாளர் கைது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் பகுதியில் 995 ஏக்கர் நிலத்தை மோசடியாக விற்க உடந்தையாக இருந்த சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம், குப்பனாபுரம், ஓம் சரவணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 995 ஏக்கர் நிலங்கள் உரிமையாளர்களுக்கு தெரியாமல் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது.

இதையடுத்து நிலத்தின் சொந்தக்காரர்கள் சுமார் 50ககும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு போலீஸில் புகார் செய்தனர்.

இதையடுத்து கடந்த 5ம் தேதியன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தூத்துக்குடி மாவட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த மோசடியில் நேரடியாக தொடர்பு இருப்பதாக சம்பவம் நடந்த தினத்தில் கடம்பூர் சார்பதிவாளர் பொறுப்பில் இருந்த தலைமை எழுத்தர் முனியசாமி என்பவரையும், விருதுநகரை சேர்ந்த பத்திர எழுத்தர் பாலகிருஷ்ணன் என்பவரையம் குற்ற பிரிவு போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+