போர்டு மோட்டார்ஸ் உருவாக்கும் 1000 புது வேலைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மறைமலை நகரில் உள்ள தனது தயாரிப்புப் பிரிவில் கூடுதலாக 1000 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையிலான திட்டத்தைத் தீட்டியுள்ளது போர்டு மோட்டார்ஸ் நிறுவனம்.
500 மில்லியன் டாலர் நிதியை இதற்காக கூடுதலாக முதலீடு செய்யவுள்ளது போர்டு மோட்டார்ஸ். இதன் மூலம் மறைமலை நகரில் உள்ள அதன் உற்பத்திப் பிரிவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாகிறது.
இந்தப் புதிய விரிவாக்கத்தின் மூலம் மறைமலை நகர் பிரிவின் ஆண்டு கார் உற்பத்தி அளவு 2 லட்சம் கார்களாக உயரும்.
இந்தப் புதிய முதலீட்டுத் திட்டத்தில், 2.5 லட்சம் என்ஜின்கள் உற்பத்தி செய்யும் புதிய பிரிவும் அடங்கும் என போர்டு மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications