என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரதம்
நெய்வேலி: நெய்வேலியில் என். எல்.சி., பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்கம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுகின்றது.
நெய்வேலி, என்.எல்.சி நிறுவாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிற்படுத்தப்பட்டோர் பேரவை சார்பில் இன்று கியூ பாலம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.
இந்த உண்ணாவிரத போரட்டத்திற்கு கடலூர் எம்.பி.அழகிரி துவக்கி வைக்கிறார். போராட்டத்தில், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் , பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய பொது செயலாளர் வீரவன்னிய ராஜா, முன்னாள் எம்.பி. கார்வேந்தன், மீனவர் விடுதலை வேங்கை மாநில தலைவர் மங்கையர் செல்வம், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நெடுஞ்செழியன், கேப்டன் நடராஜன், மூ.மு.க. மாநில துணைத் தலைவர் நாராயணன், பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் மாவட்ட செயலாளர் வீரவன்னிய வேந்தன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications