தீபாவளி நெரிசல் - சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்
மதுரை: தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து மதுரை ரயில்வே மேலாளர் அலுவலக செய்திக் குறிப்பு...
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் (வண்டி எண் 0615) ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 15 ம் தேதி அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.
நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் ( வண்டி எண் 0616) ரயில், நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 16 ம் தேதி அன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் (வண்டி எண் 0633) ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 17 ம் தேதி அன்று இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.
நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் (வண்டி எண் 0634) ரயில், நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 18 ம் தேதி அன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications