சென்னையில் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் நீர் புகுந்தது- ஒருவர் பலி?
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. பலர் வீடுகளை காலி செய்து சாலை ஓரத்தில் வசித்து வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதி கடல் சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு சாதாரண சமயங்களிலும் பெரும் அலைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீசித்து (24) என்பவர் கடந்த 2ம் தேதி தனது நண்பர் தினேஷ் என்பவருடன் இப்பகுதியில் மணல் பரப்பில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று வந்த பெரிய அலை ஒன்று அவரை இழுத்து சென்றுவிட்டது. கடல் அலைகளுக்கு இடையே சிக்கி கொண்ட அவர் கைகளை உயர்த்தி தன்னை காப்பாற்றுமாறு கூறிய போதிலும், கடலுக்குள் இறங்க யாரும் துணியவில்லை.
இந்த சம்பவம் நடந்து 4 நாட்களாகிய போதும் அவரது உடல் கிடைக்கவில்லை. உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெளர்ணமி என்பதால் நேற்று அலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மேலும், கடல் நீர் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் சுமார் 500 மீ வரை ஊருக்குள் வந்தது.
சுமார் 10க்கும் மேற்பட்ட குடிசைகளில் இருந்த அரிசி, பருப்பு, சாமான்களை அடித்து சென்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்துள்ளனர். முக்கியமான பொருட்களை தெரிந்தவர்கள் வீட்டில் வைத்துவிட்டு சாலையில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.
இதையடுத்து நேற்று இரவு சுமார் 11.30 மணிக்கு சென்னை மாவட்ட கலெக்டர் ஷோபனா அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். குடிசைகளை இழந்த மக்களை சமுதாய கூடத்தில் தங்குமாறு கேட்டு கொண்டார். ஆனால், திருட்டு பயம் காரணமாக பெரும்பான்மையான மக்கள் அங்கு செல்லவில்லை.
இந்த கடல் சீற்றத்துக்கு சீனிவாசபுரம் தேவாலயமும் சேதம் அடைந்துள்ளது. அதன் பெரும்பான்மையான பகுதிகள் கடல் அரிப்பில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலையும் அப்பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications