முதல்வரை நடிகர்கள் மட்டும் எப்படி அடிக்கடி சந்திக்க முடிகிறது - தலித் பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

கரூர்: தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக சேவர்கள், அரசு சங்க பிரநிதிகள், பொது மக்கள் என பலர் தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சந்திக்க பல மாதங்கள் காத்து கிடக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் நடிகர் நடிகைகளும் எப்படி அடிக்கடி சந்திக்கின்றனர் என்று கேட்டுள்ளார் தலித் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன்.

இது குறித்து தலித் பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்,

பத்திரிக்கையாளர்கள் நாட்டின் கண்கள் போன்றவர்கள் . அவர்களால் மட்டுமே மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டு வர முடியும்.

அப்படி ஒரு செய்திக்காக தினமலர் நாளிதழ் செய்தி கட்டுரை வெளியிட்டு இருக்கலாம். மேலும் தங்களது செய்தியில் தவறு நேர்ந்துவிட்டதை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளது. அதை பெருந்தன்மையாக திரைப்படத் துறையினர் ஏற்றுக் கொண்டு இருக்காலம். அதை விடுத்து கைது வரை போராடி இருக்க வேண்டியதில்லை. இது நல்ல முன் உதாரணம் அல்ல.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யார் யாரிடம் எவ்வளவு நிதி அன்பளிப்பாக வாங்கியுள்ளனர் என்பதை ஒவ்வொரு வருடமும் தேர்தல் கமிஷனே பெறுப்பேற்று லிஸ்ட் வெளியிட வேண்டும்.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்யும் நடிகர் நடிகைகளுக்கு தமிழக அரசு விருதுக்கு தேர்வு செய்தவதை தடை செய்ய வேண்டும்.

தினமலர் ஆசிரியர் லெனினை கைது செய்த தமிழக போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை உடனே விடுதலை செய்யாவிட்டால் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள காந்தி சிலையிடம் நள்ளிரவு 12 மணிக்கு சமூக ஆர்வலர்களை திரட்டி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+