விபத்து இல்லாத தீபாவளி-கமிஷனர் வேண்டுகோள்
சென்னை: இந்த ஆண்டு வெடிவிபத்து இல்லாத தீபாவளி கொண்டாட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி நெருங்கி விட்டது. இன்னும் நான்கு நாட்கள்தான் தீபாவளிக்கு உள்ளது. இந்தநிலையில், கடந்த மாதம் முதல் தொடர்ந்து பட்டாசு தொடர்பான விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த வீடு இடிந்து சிறுமி உள்பட பலர் இறந்தனர்.
இம்மாதம் தஞ்சை வானமர்கோட்டையில் வீட்டில் பட்டாசு தயாரித்த பெண் பரிதாபமாக பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன் சோழவந்தான் ரயில்வே நிலையத்தில் பட்டாசு வெடித்து இருவர் பலியாயினர்.
இதையடுத்து பட்டாசு விபத்துகளை தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் கூறுகையில்,
இந்த ஆண்டு விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் 466 தற்காலிக பட்டாசு கடைகளும், வட சென்னையில் 19 நிரந்தர பட்டாசு கடைகளுக்கும் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமானது. அதை கோல்டன் அவர்ஸ் என்பர். அந்த சமயங்களில் 108 மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தொடர்பு கொண்டால் பெரும் சிக்கலை தவிர்க்கலாம்.
பட்டாசு வெடிப்பவர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
நெல்லையில் தீவிர கண்காணிப்பு...
நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் குணசீலன் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
வெடிமருந்து கிட்டாங்கி, குடோன்களை போலீஸார் தணிக்கை செய்ய இருக்கின்றனர். வெடிகள் அதிக ஸ்டாக் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்.
உரிமம் இன்றி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காய வெடிகளை தயாரிப்பவர்களை பற்றிய தகவல்களை அறிந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சேமிப்பு கிடங்குகளில் வெடிமருந்து வாங்குபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். பேருந்துகளில் வெடிபொருட்களை கொண்டு செல்வது தடுக்கப்படும். உரிமம் பெற்ற சில்லரை விற்பனையாளர்கள், கடைகளில் தீ விபத்தை தவிர்க்க மணல் மற்றும் தண்ணீர் வைத்திருத்த வேண்டும்.
கடைகளின் உள்ளே பொதுமக்களை அனுமதிக்க கூடாது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. 125 டெசிபலுக்கு மேல் அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications