இலங்கை தூதரக தாக்குதல்: டெல்லி போலீஸ் வருகை-முன் ஜாமீன் கோரும் கிருஷ்ணசாமி

அதே போல டெல்லி போலீசார் தன்னையும் கைது செய்வார்கள் என்று கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி அக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மனு செய்துள்ளார்.
இதை அவசர மனுவாகக் கருதி விசாரிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
டெல்லியில் அக்டோபர் 2ம் தேதி புதிய தமிழகம் கட்சியினர் இலங்கையைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென இலங்கைத் தூதரகத்திற்குள் புகுந்த சிலர் அங்கு தாக்குதலில் இறங்கினர். போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லாததால் தூதரக வளாகத்திற்குள் இருந்த பூத்தொட்டிகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இந்த சம்பவத்தால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்தது. இந்திய அரசும் உடனடியாக வருத்தம் தெரிவித்துக் கொண்டது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஜகத் சிங் தலைமையிலான குழு திருச்சி வந்துள்ளது.
சென்னை போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் இவர்கள் திருச்சிக்கு வந்துள்ளனராம். தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் குணசேகரனை டெல்லி போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவர் திருச்சியில் வசிப்பதாக தமிழக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஒருவர் டெல்லி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் வந்துள்ளனராம்.
உறையூர் அரசு மருத்துவமனையில் குணசேகரன் வேலை பார்ப்பதாக சென்னை போலீஸார், டெல்லி போலீஸாருக்குத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து திருச்சி வந்துள்ள டெல்லி போலீஸார், அவரைக் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் தான் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் கிருஷ்ணசாமி.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications