நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்-இருவர் கைது

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கொலை செய்யப்படுவார் என தொலைபேசியில் மிரட்டிய இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 11ம் தேதி இரவு அகமதாபாத் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் தீவிரவாதி ஒருவர் குஜராத் முதல்வர் மோடி மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல போவதாக தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய மற்றொரு நபர், எங்கு வைத்து அவர்கள் கொல்லப்பட இருக்கிறார்கள் என்பதை கூறியுள்ளார். இதையடுத்து ஏற்கனை இஜட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும், போலீஸார் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இது தொடர்பாக அவர்கள் நேற்று இருவரை கைது செய்தனர். அவர்களிடம இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் இருவரது பெயர், ஊர் உள்ளிட்ட மற்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+