மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்- ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
நெல்லை: பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சில ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவுகள், மானபங்கப்படுத்துதல், பாலுணர்ச்சியை துண்டும் விதமாக தவறான அணுகுமுறை மேற்கொள்ளுதல், வன்புணர்ச்சி ஏற்படுத்துதல் மற்றும் தண்டனை அளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறான தவறான அணுகுமுறையால் மாணவிகள் பள்ளியில் படிக்கும் சூழ்நிலைக்கு பாதகம் உண்டாகிறது. மாணவர்-ஆசிரியர் இடையேயான நல்லுறவு சீர்குலைகிறது.
தவறான செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது மிக கடு்மையான குற்றவியல் நடவடிக்கை மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கருதி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.