தீவிரவாத முதலீட்டாளர்கள்: செபி எச்சரிக்கை!
மும்பை: அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவிரவாத அமைப்புகள் இந்திய பங்குச் சந்தையில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை மையம் (செபி) எச்சரித்துள்ளது.
இதுபோன்ற முதலீட்டாளர்கள் குறித்து தங்களுக்குத் தெரிந்த தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து பங்கு பரிவர்த்தனை மையங்களுக்கும் செபி அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில தீவிரவாத அமைப்புகள், அதன் தலைமைகள் குறித்த தகவல்களையும் அனைத்து மையங்களுக்கும் செபி அனுப்பியுள்ளது.
"குறிப்பிட்ட எந்த வாடிக்கையாளராவது, நாங்கள் அனுப்பியுள்ள தகவல்களுடன் ஒத்துப் போவது தெரிய வந்தால் 24 மணிநேரத்துக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்..." என்று அந்த எச்சரிக்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் தீவிரவாதிகள் பட்டியலில் தாவூத் இப்ராகிம் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் பட்டியலை அனுப்பவிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் கிடைத்த 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களின் முதலீடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுவிடும் என செபி கூறியுள்ளது.