For Daily Alerts
Just In
ராமேஸ்வரம்-ராஜபக்சே தங்கைக்கு கருப்புக் கொடி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலுக்கு கணவருடன் வந்த ராஜபக்சேவின் தங்கை நிரூபமா ராஜபக்சேவுக்கு மதிமுகவினர் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தினர்.
ராஜபக்சேவின் தங்கை நிரூபமா. இவர் தனது கணவருடன் (இவர் தமிழர்) திருச்செந்தூர் வந்து சிறப்பு யாகம் நடத்தினார். இன்று நிரூபமாவும், அவரது கணவரும் ராமேஸ்வரம் வந்தனர்.
அங்குள்ள கோவிலுக்கு இவர்கள் வந்தபோது மதிமுக செயலாளர் இளங்கோ தலைமையில் மதிமுகவினரும், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினரும் கூடி நின்று கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுதாரித்துக் கொண்ட போலீஸார் போராட்டம் நடத்திய 19 பேரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
Comments
Story first published: Monday, November 9, 2009, 14:47 [IST]