திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் போட்டி- ஜெ
கடந்த முறை நடந்த பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி இடைத் தேர்தலை அதிமுகவும், மதிமுகவும் புறக்கணித்தன. இதனால் கூட்டணிக் கட்சிகளாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை அதிமுகவை விமர்சித்து வெளியேறி தனியாக போட்டியிட்டன.
இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக போட்டியிடும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த தேர்தலை அதிமுக புறக்கணிக்கக் காரணம் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்துத்தான். எனவே திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்டு வென்றது. வந்தவாசி தொகுதியில் திமுக வென்றது.
இந்த இரு தொகுதிகளிலும் இம்முறை அதிமுகவும், திமுகவும் போட்டியிடும் என்பதால் நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.