டெல்லியில் சிஐஏ தலைவர்-நாராயணனுடன் ஆலோசனை
சிஐஏ தலைவர் லியான் பனீட்டா பாகிஸ்தான் நேற்று பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். தீவிரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் ஆப்கன் நிலவரம் குறித்து அவர் பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ஐஎஸ்ஐ தலைவர் அகமது சுஜா பாஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு காரணமாக, பனீட்டாவின் வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்புகள் குறித்து அதிகார்பபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பனீட்டை பிரதமரை சந்தித்ததை பிரதமர் அலுவலகத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லை நிலவரம் குறித்த முக்கியத் தகவல்களை இரு தரப்பும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை பனீட்டா டெல்லி வந்தார். 3 நாள் பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார்.
டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அவர் சந்தித்து பேசினார்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒத்துழைப்பது, புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பாக இரு தரப்பும் ஆலோசித்ததாக தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத் தாக்குதல் சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்காவில் கைதாகியுள்ள ஹெட்லி, ராணா குறித்து விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
இருப்பினும் அதுகுறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.