அதிமுகவின் 4 கட்ட அமைப்புத் தேர்தல் தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க உள்கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் அமைப்பு தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வருகிற 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை முதல்கட்ட தேர்தலும், 27ம் தேதி முதல் நடக்கும் 2ம் கட்ட தேர்தலும் திட்டமிட்டபடி நடக்கும்.
ஆனால், இதற்கு அடுத்தபடியாக வரும் நான்கு கட்டங்களுக்கான அமைப்பு தேர்தல்களும் வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்கு பின்பு நடைபெறும். இடைத் தேர்தல்கள் முடிந்த பிறகு தேதிகள் அறிவிக்கப்படும்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications