கூடுதல் பாதுகாப்பு-நீதிமன்றத்தை அணுகும் பொன்சேகா
கொழும்பு: தனக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை அணுக இலங்கை முன்னாள் முப்படை கூட்டுத் தளபதியான சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.
அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக
பொன்சேகா நிறுத்தப்படவுள்ளார்.
சமீபத்தில் பதவி விலகிய பொன்சேகா அரசு வீட்டை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார் ராஜபக்சே.
அவரது பாதுகாப்புக்கு முதல் கட்டமாக மொத்தம் 25 பாதுகாப்புப்படை வீரர்களை ஒதுக்கிய அரசு, ஒரு ஷிப்டுக்கு 8 வீரர்கள் வீதம் வீரர்களை பாதுகாப்புக்கு வைத்துக் கொள்ளலாம் என்று கூறியதுடன் குண்டு துளைக்காக கார் ஒன்றையும் அவருக்கு ஒதுக்கியது.
இதையடுத்து ராஜபக்சேவை நேரில் சந்தித்த பொன்சேகா, தனது பாதுகாப்புக்கு 100 வீரர்கள் தேவைப்படுவதாகக் கூறினார்.
ஆனால் 2 ராணுவ அதிகாரிகள், 10 அதிரடிப்படை வீரர்கள், 50 பாதுகாப்புப்படை வீரர்கள் அடங்கிய 62 வீரர்களை அனுமதிப்பதாக அரசு அறிவித்தது.
ஆனால், எனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே இந்த பாதுகாப்பு போதாது. வீரர்களின்
எண்ணிக்கையை அதிகரி்க்க வேண்டும் என்று பொன்சேகா கோரியுள்ளார்.
அரசு தனது பாதுகாப்பை அதிகரிக்காவிட்டால் கூடுதல் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் மேலும் அதிபர் தேர்தலில் பேட்டியிட வசதியாத கொழும்பில் தேர்தல் அலுவலகத்தை
திறந்துள்ளார் பொன்சேகா.
தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே பிரசார ஏற்பாடுகளை நிர்வகிக்க இலங்கை முற்போக்கு
முன்னணியின் தலைவர் மங்கள சமரவீராவை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
இந் நிலையில் ராணுவ வீரர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஜனநாயக சுதந்திரம், மனித
உரிமைகளை கட்டிக் காப்பதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.
அடடே...!












Click it and Unblock the Notifications