சத்யம் மோசடி ரூ.14,000 கோடி: குற்றப்பத்திரிகை வெளியிட்டது சிபிஐ

நேற்று தாக்கல் செய்யப்பட்ட சத்யம் மோசடி குறித்த குற்றப் பத்திரிகையில் இதற்கான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசின் இந்த புலனாய்வு அமைப்பு.
சத்யம் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7,800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சத்யம் நிறுவனத்தை வாங்கியது மகிந்திரா நிறுவனம்.
சத்யம் ராமலிங்க ராஜூ மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கடைசியாக மகிந்திரா சத்யம் துணைத் தலைவரும், ஆடிட் பிரிவு பொறுப்பாளருமான பிரபாகர் குப்தாவும் கைது செய்யப்பட்டார்.
இப்போது உண்மையில் சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடி எத்தனை கோடி ரூபாய் என்ற விவரத்தை தனது குற்றப்பத்திரிகையில் வெளியிட்டுள்ளது சிபிஐ.
ராஜூ வாங்கிய கடன் ரூ.1,220 கோடி:
200 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப் பத்திரிகையில் சத்யம் நிறுவன நிதி எவ்வாறு மோசடியாக உயர்த்திக் காட்டப்பட்டதென்றும், போலியான வாடிக்கையாளர்கள் உருவாக்கப்பட்டதையும் அம்பலமாக்கியுள்ளது.
மேலும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் சொத்துக்களையும் கண்டுபிடித்துள்ளது சிபிஐ. 1,065 இடங்களில் இந்த சொத்துக்கள் பரவியுள்ளன.
இவற்றில் 6000 ஏக்கர் நிலம், 40000 ஸ்கொயர் யார்டு வீட்டு மனைகள், 90000 சதுர அடி கட்டடங்கள் போன்றவை அடங்கும்.
ராமலிங்க ராஜூ போலி பத்திரம் மூலம் வங்கியில் ரூ.1.220 கோடி கடன் வாங்கியுள்ளார். இந்த விவரம் முதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. இப்போது அதையும் சேர்த்து இரண்டாவது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, அவர் ரூ.350 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ராஜூவுக்கு கல்லீரல் நோய்:
இதறகிடையே, மாரடைப்பால் பாதிக்கப்பட்டு நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமலிங்க ராஜுவுக்கு, கல்லீரல் வீக்க நோய் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சிகிச்சை அளிக்க ரூ.8 லட்சம் செலவாகும். இந்த சிகிச்சைக்கான செலவை ஏற்க சிறைத்துறை மறுத்துவிட்டது.
சிகிச்சை செலவை தானே ஏற்பதாக ராமலிங்க ராஜூவின் மனைவி நந்தினி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சிறைத்துறை இயக்குனர் லோகேந்திர சர்மாவிடம் மனு ஒன்றையும் கொடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications