சத்யம் மோசடி ரூ.14,000 கோடி: குற்றப்பத்திரிகை வெளியிட்டது சிபிஐ

நேற்று தாக்கல் செய்யப்பட்ட சத்யம் மோசடி குறித்த குற்றப் பத்திரிகையில் இதற்கான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசின் இந்த புலனாய்வு அமைப்பு.
சத்யம் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7,800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சத்யம் நிறுவனத்தை வாங்கியது மகிந்திரா நிறுவனம்.
சத்யம் ராமலிங்க ராஜூ மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கடைசியாக மகிந்திரா சத்யம் துணைத் தலைவரும், ஆடிட் பிரிவு பொறுப்பாளருமான பிரபாகர் குப்தாவும் கைது செய்யப்பட்டார்.
இப்போது உண்மையில் சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடி எத்தனை கோடி ரூபாய் என்ற விவரத்தை தனது குற்றப்பத்திரிகையில் வெளியிட்டுள்ளது சிபிஐ.
ராஜூ வாங்கிய கடன் ரூ.1,220 கோடி:
200 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப் பத்திரிகையில் சத்யம் நிறுவன நிதி எவ்வாறு மோசடியாக உயர்த்திக் காட்டப்பட்டதென்றும், போலியான வாடிக்கையாளர்கள் உருவாக்கப்பட்டதையும் அம்பலமாக்கியுள்ளது.
மேலும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் சொத்துக்களையும் கண்டுபிடித்துள்ளது சிபிஐ. 1,065 இடங்களில் இந்த சொத்துக்கள் பரவியுள்ளன.
இவற்றில் 6000 ஏக்கர் நிலம், 40000 ஸ்கொயர் யார்டு வீட்டு மனைகள், 90000 சதுர அடி கட்டடங்கள் போன்றவை அடங்கும்.
ராமலிங்க ராஜூ போலி பத்திரம் மூலம் வங்கியில் ரூ.1.220 கோடி கடன் வாங்கியுள்ளார். இந்த விவரம் முதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. இப்போது அதையும் சேர்த்து இரண்டாவது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, அவர் ரூ.350 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ராஜூவுக்கு கல்லீரல் நோய்:
இதறகிடையே, மாரடைப்பால் பாதிக்கப்பட்டு நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமலிங்க ராஜுவுக்கு, கல்லீரல் வீக்க நோய் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சிகிச்சை அளிக்க ரூ.8 லட்சம் செலவாகும். இந்த சிகிச்சைக்கான செலவை ஏற்க சிறைத்துறை மறுத்துவிட்டது.
சிகிச்சை செலவை தானே ஏற்பதாக ராமலிங்க ராஜூவின் மனைவி நந்தினி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சிறைத்துறை இயக்குனர் லோகேந்திர சர்மாவிடம் மனு ஒன்றையும் கொடுத்துள்ளார்.
-
காங்கிரஸ், தேமுதிகவுக்கு திமுக வாரி வழங்கியாச்சு! எங்களுக்கு ஒரு நியாயம்? சீறிய CPIM சண்முகம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications