லஷ்கர் தொடர்புகளை பாக். அறுக்க வேண்டும்- ஒபாமா எச்சரிக்கை
வாஷிங்டன்: லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாதக் குழுக்களை பயன்படுத்தும் செயலை பாகிஸ்தான் உடனடியாகக் கைவிட வேண்டும். அதை இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு அவர் 2 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி...
ஒபாமா தனது கடிதத்தில், பாகிஸ்தானுடன் புதிய பாதுகாப்பு உறவை மேற்கொள்ள அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகளில் நிலவும் பதட்டத் தன்மை குறைக்கப்பட வேண்டும் என்பதை ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளுடன் பாகிஸ்தான் மென்மையான அணுகுமுறையைக் கையாளுவது, அவர்களை துணைக்குச் சேர்த்துக் கொள்வது போன்றவை இந்தியாவுக்கு எதிரான செயல்களாக தோன்றுகிறது.
இது பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு முரணாக உள்ளது. அல் கொய்தா தீவிரவாதிகளுடன் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு லஷ்கர் போன்ற அமைப்புகளுக்கு உதவுவது நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள
முடியாதது.
அல் கொய்தா, ஆப்கான் தலிபான், ஹக்கானி நெட்ஒர்க், லஷ்கர் இ தொய்பா, தெஹரீக் இ தலிபான் ஆகிய ஐந்து தீவிரவாதகக் குழுக்களுக்கும், தனக்கும் உள்ள தொடர்புகள், உறவுகள் குறித்து பாகிஸ்தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இந்த அமைப்புகளுடனான உறவுகளை பாகிஸ்தான் திட்டவட்டமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.
மேலும், இந்த மாற்றங்களை பாகிஸ்தான் செய்யாவிட்டால் ஆப்கானிஸ்தானில் வெற்றி கிடைக்காது. பாகிஸ்தானும் தீவரவாதத்தின் பிடியில் சிக்காமல் தப்ப முடியாத நிலை ஏற்படும்.
பாகிஸ்தானுக்கு ராணுவ பொருளாதார உதவிகள் அதிக அளவில் வழங்கப்படும். இது தவிர, நெருக்கமான உறவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், தீவிரவாதக் குழுக்களுடனான உறவை பாகிஸ்தான் முற்றிலும் கைவிட வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.
ஒபாமாவின் இந்தக் கடிதத்தை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் பாகிஸ்தான் வந்திருந்தபோது சர்தாரியிடம் நேரிலேயே கொடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications