246 பவுன் போலி நகையை வங்கியில் அடகு வைத்த அடேங்கப்பா பிரமுகர்கள் !
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அய்யம்பாளையம் அருகே உள்ள லட்சுமி விலாஸ் வங்கியில் 246 பவுன் போலி நகைகளை அடகு வைத்த ஐந்து பேர் மீது திண்டுக்கல் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தில் உள்ளது லட்சுமி விலாஸ் வங்கி. இந்த வங்கியில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கொடைரோடு பெரியகருப்பத்தேவர், இவரது மருமகன் ரவி, திண்டுக்கல் ஆர்.வி.எஸ். நகரைச் சேர்ந்த மலர்ராஜ் (40), ரவியின் மனைவி கவிதா, நண்பர் முரளி ஆகியோர் 246 பவுன்களை அடகு வைத்தனர்.
இந்த நகைகளை கடந்த நவம்பர் மாதம் 18 ம் தேதி அன்று நகைகளை மறு மதிப்பீடு செய்து, 16 லட்சத்து 40 ஆயிரம் பணம் பெற்றனர்.
இந்த நிலையில் வங்கியில் அடகு வைத்த நகைகள் அனைத்தும் முழுவதும், போலியானவை என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக வங்கி கிளை மேலாளர் ஞானசேகரன், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதில் விசாரணை நடத்திய போலீசார், மலர்ராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்கள் தலைமைறைவு ஆகி விட்டனர்.
இதில் பெரியகருப்பத்தேவர் ஓய்வுபெற்ற வன அலுவலர் ஆவார். இவரது மருமகன் ரவி கொடைக்கானலில் மின்வாரிய ஊழியராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications