கோவையில் ஜெ. கொடும்பாவி எரிப்பு-6 பேர் கைது
கோவை: கோவையில் ஜெயலலிதா கொடும்பாவியை எரித்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அருந்ததியினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்கியதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரிக்கப்போவதாக அருந்தமிழர் விடுதலை இயக்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று பிற்பகல் கலெக்டர் அலுவலகம் எதிரிலிருந்து அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில துணை அமைப்பாளர் அருண் உள்பட 6 பேர் ஜெயலலிதா உருவபொம்மையை கையில் தூக்கி வந்தனர்.
பின்னர் உருவபொம்மைக்கு திடீரென்று தீவைத்து நடுரோட்டில் தூக்கி வீசினார்கள்.
இதையடுத்து அருண், மண்டல அமைப்பாளர் வேலாயுதம், மண்டல அமைப்பு செயலாளர் இளவேனில், மாவட்ட செயலாளர் புதியவன், முருகேசன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications