சென்னை ஏர்போர்ட்டில் பயணிகள் திடீர் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானம் புறப்பட தாமதமானதால் பயணிகள போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் தனியார் விமானத்தில் பயணம் செய்ய 165 பயணிகள் தயாராக இருந்தனர். பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடிந்து பயணிகள் காத்திருந்தனர்.
மாலை 6.50 புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக இரவு 9 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 10 மணி வரை விமானம் புறப்படவில்லை.
இதனால் ஆக்ரோஷமடைந்த பயணிகள் மையப்பகுதியில் வந்து கோஷமிடத் துவங்கிவிட்டனர். உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்து, இரவு 12 மணிக்குள் விமானம் புறப்பட உத்தரவாதம் அளித்தனர். இதன் பிறகு பயணிகள் ஓய்வறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications