வங்கிகள் இணைப்பு... அரசு வற்புறுத்தவில்லை! - பிரணாப் முகர்ஜி

நாட்டுடையமாக்கப்பட்ட வங்கிகளை இணைத்து ஆறு அல்லது ஏழு பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்ற திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் முன் வைக்கப்பட்டது.
இதனைப் பரிசீலித்த அரசு கொள்கையளவில் ஒப்புதல் வழங்கிவிட்டது.
ஆனால் இன்னும் எந்த வங்கியும் இணையவில்லை.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "இந்த விஷயத்தில் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இரு அரசு வங்கிகள் ஒன்றிணைவதாக அரசுக்கு தெரிவித்தால், அதற்கான அனுமதி தருவதற்கு தயாராக உள்ளது அரசு. ஆனால் அப்படி எந்த கோரிக்கையும் வரவில்லை..." என்றார்.
ஆனால் தொடர்ந்து குருதாஸ் தாஸ்குப்தா போசுகையில், "இணைப்பு என்ற பெயரில் சிறிய வங்கிகளை இணைக்க முயற்சித்தால், நாட்டில் இன்னமும் கூட வங்கிகளைப் பயன்படுத்தாத 41 சதவிகித மக்கள் இன்னும் அந்நியப்பட்டு நிற்பார்கள்" என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications