புவிவெப்ப மாற்றம்-12 விலங்கினங்கள் அழியும் ஆபத்து
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்கில் உள்ள இந்த வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளமிங்கோ, மஸ்க் ஆக்ஸ் என்ற அரிய வகை எருது, ஹாக்ஸ்பில் வகை ஆமை உள்ளிட்ட 12 விலங்கினங்கள் புவிவெப்ப மாற்றம் காரணமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலம் மற்றும் கடல் தட்பவெப்பம் மாறி விட்டது. மழை காலங்கள் மாறியுள்ளன. புதிய வகை நோய்கள் தாக்கத் தொடங்கியுள்ளன. இந்த வினோத சூழல் காரணமாக இந்த 12 விலங்கினங்களும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
துருவக் கரடிகள் இன்று பெருமளவில் அழிந்து விட்டன. உலகில் உள்ள ஒவ்வொரு வனப்பகுதியிலும் விலங்குகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது.
புவிவெப்ப மாற்றத்தின் நேரடி விளைவை உலகம் முழுவதும் உள்ள விலங்கினங்கள் சந்தி்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன என்று இந்தக் கழகத்தின் தலைவர் ஸ்டீவன் சான்டர்சன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications