For Quick Alerts
For Daily Alerts
Just In
உணவு பொருள் பணவீக்கம் கடும் உயர்வு!
சென்னை: உணவுப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டதால், பணவீக்கத்தின் அளவும் உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் இறுதி வார நிலவரப்படி 19.05 சதவிகிதமாக உணவுப் பொருள் பணவீக்க விகிதம் உள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை 50 முதல் 100 சதவிகிதம் வரை உயர்வு கண்டுள்ளது. குறுப்பாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த விவரங்கள் நிச்சயம் கவலைக்குரியதுதான். விரைவில் உணவுப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் பணவியல் கொள்கையை இதற்கேற்ப மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Thursday, December 10, 2009, 16:12 [IST]