நிதி நெருக்கடி - துபாயில் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

துபாய்: நிதி நெருக்கடியால் இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவரது இரு குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர். அப்பெண்ணின் கணவர் தூக்குக் கயிறு சரியாக மாட்டப்படாததால் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு 38 வயதாகிறது. அவரது கணவர் பிசினஸில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் துபாயில் தங்களது மகன் (22), மகள் (20) ஆகியோருடன் வசித்து வந்தனர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் கராமா என்ற பகுதியில் இவர்களது வசிப்பிடம் உள்ளது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதன்கிழமை தங்களது வீட்டில் நான்கு பேரும் தூக்கில் தொங்கினர். இதில் அந்தப் பெண்ணும், அவரது இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். ஆனால் அப்பெண்ணின் கணவர் சரியாக தூக்கு கயிறு மாட்டாததால் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இவர்களது வீட்டுக்கு அருகாமையில் வசிப்போர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் போலீஸாருடன் விரைந்து வந்தனர்.

உயிரிழந்த மூவரின் உடல்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். காயத்துடன் போராடிக் கொண்டிருந்த பெண்ணின் கணவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரிடம் தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+